செல்போன் கொண்டு வந்ததால் ஆத்திரம்.. மாணவரை கன்னத்தில் பளார் பளார் விட்ட ஆசிரியர்- வைரல் வீடியோ
ஆரணி: ஆரணி அருகே பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்த மாணவனின் கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அருகே பத்தியாவரத்தில் சூசை நகரில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கட்டுக்கோப்பாக இருப்பதால் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியினர் இந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்பது விதி. அதை மீறி மாணவன் ஒருவர் செல்போன் கொண்டு வந்துள்ளார்.
இதை ஆசிரியர் பார்த்துவிட்டார். உடனே அந்த மாணவரை அழைத்த ஆசிரியர் முட்டி போட வைத்து கன்னத்தில் சரமாரியாக பளார் விட்டார். இதை அங்கு செல்போன் வைத்திருந்த இன்னொரு மாணவன் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். இதனால் இந்த வீடியோ வைரலாகியது.
மாணவர்களை ஆசிரியர்கள் கொடூரமாக அடிக்கக் கூடாது என்ற விதியிருந்தும் ஒரு செல்போன் கொண்டுவந்ததற்காக மாணவனை கண்டிக்காமல், அவனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்காமல் கன்னத்தில் பளார் பளார் என அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.