அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தர்ம அடிவாங்கிய திருவண்ணாமலை சாமியார் கைது
திருவண்ணாமலை: அமெரிக்காவில் இருந்து வந்து தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண், திருவண்ணாமலை அத்தியந்தலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இதேபகுதியில் துறவியாக நாமக்கல்லை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் வலம் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் வசித்து வந்த வீட்டுக்குள் மணிகண்டன் இன்று அத்துமீறி நுழைந்திருக்கிறார். அத்துடன் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார்.
கோவை: தலித் என்பதால் அலுவலகத்தில் பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள்-பெண் ஊராட்சி தலைவர் பகீர் புகார்
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் இரும்புதடியால் சரமாரியாக மணிகண்டனை தாக்கினார். இதில் தலையில் காயங்களுடன் பொதுமக்களிடம் சிக்கினார் மணிகண்டன்.
பின்னர் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.