திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவண்ணாமலையில் பரபரப்பு... அத்துமீற முயன்ற கொழுந்தனார்.. வெட்டி கொலை செய்த அண்ணி!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனாரை அவரது அண்ணி வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் ராஜா, இவர் தகாத முறையில் நடக்க முயன்றதால், அவரது அண்ணி பராசக்தி வெட்டிக்கொலை செய்துள்ளார்

thiruvannamalai: sister-in-law who killed her husbands brother

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பராசக்தி. செல்வம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருவதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். வீட்டில் தனியாக இருக்கும் பராசக்தியிடம் செல்வத்தின் தம்பி ராஜா தவறாக நடந்து கொள்ள முயன்று வந்ததாக கூறப்படுகிறது.

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

இந்த நிலையில், நேற்றிரவும் குடித்துவிட்டு வந்த செல்வம். குடிபோதை வெறியில்,அண்ணி பராசக்தியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பராசக்தி, செல்வத்தை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பராசக்தியை அழைத்து விசாரித்து வருகிறார்கள்.

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனாரை அவரது அண்ணி வெட்டிக் கொலை செய்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

English summary
thiruvannamalai: the sister-in-law who killed her husband's brother due to try to rape. police case filled against sister-in-law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X