ஏலேய் மதுரை சிட்னின்னா.. திருவண்ணாமலை என்ன தெரியுமாலே.. நியூயார்க்லே- வாவ் கலர்புல் வீடியோ
Recommended Video
சென்னை: திருவண்ணாமலை நகரமே கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நியூயார்க் சிட்டி போல் காட்சி அளிக்கிறது.
கார்த்திகை தீபத்திருவிழா கடந்த இரு தினங்களாக கொண்டாடப்பட்டு வந்தது. இதையொட்டி தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிப்படுவ
அந்த வகையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருவண்ணாமலை மிகவும் விசேஷம் ஆகும். இங்கு அத்தினத்தன்று இரவு நேரத்தில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் விளக்குகள் ஏற்பட்டு ஜெகஜோதியாக காட்சி அளிப்பது பார்ப்பதற்கு உற்சாகத்தை கொடுக்கிறது.
மதுரை சிட்னின்னா
— SKP KARUNA (@skpkaruna) November 25, 2018
திருவண்ணாமலை நியூயார்க்லே.. 💪 pic.twitter.com/Admf2nYIcL
இது போல் விளக்குகள் வெளிச்சத்தை பார்க்கும் போது, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரை போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காக்கள், வைகை நதி பாயும் கரை ஓரம் அமைய இருப்பதால் மதுரை விரைவில் சிட்னி நகரை போல் காட்சி அளிக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அப்ப மதுரை சிட்னின்னா, திருவண்ணாமலை நியூயார்க்கா.