சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த சாப்ட்வேர் என்ஜீனியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி
Recommended Video
திருவண்ணாமலை: சீனாவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த சாப்ட்வேர் என்ஜீனியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு இது வரை 170-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். கொரோனா வைரஸ் உலகில் உள்ள 19 நாடுகளில் பரவி வருகிறது.
ஏர் இந்திய விமானமும் சீனாவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா குடும்பத்தில் இது 7ஆவது வைரஸ் ஆகும்.கொரோனா வைரஸ் நோய்க்கு உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.
15 பேர் கொண்ட படை.. சீனாவின் வுஹன் நகரத்திற்கு செல்லும் ஏர்இந்தியா.. இந்தியர்களை இன்று மீட்க முடிவு
இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த சாப்ட்வேர் என்ஜீனியர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்தார். அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.