செங்கம் அருகே பரிதாபம்.. கிணறு வெட்டும் பணியின் போது விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி
செங்கம்: செங்கம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் பணியின் போது ஏற்பட்ட எதிர்பாராதவிதமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அருகேயுள்ள ஆலத்தூர் என்ற கிராமத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது ஆழமாக தோண்டப்பட்டு வந்த கிணற்றில் இருந்து, வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை கயிறு மூலம் மேலே எடுத்து வரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
பொன்னமராவதியில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்.. வன்முறையை தடுக்க போலீஸ் குவிப்பு
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று கிணற்றில் இருந்து மண் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் ஐவர் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆலத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.