குடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்
திருவண்ணாமலை: குடிப்பழக்கம்.. அடிக்கடி சண்டை.. மனம் வெறுத்த மனைவி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து காப்பற்ற முயன்ற கணவனும் தீயில் கருகினார். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரத மனைவி தீபா. மணிகண்டன் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார் இவர் மதுவுக்கு அடிமையானவராம்.
மணிகண்டன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகறாரில் ஈடுபட்டு வந்திருக்கிறாராம். இந்த நிலையில் 25 ஆம் தேதி இரவு கணவன்-மனைவிக்குள் பணம் கொடுக்கல்-வாங்கலில் விஷயமாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அன்று தீபா மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த தீபா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் எரியதொடங்கியதால் தீபா அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மணிகண்டன் மனைவி கண் முன்னே எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றார். இதில் மணிகண்டன் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினார். மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்துவிட்டார்.
படுகாயத்துடன் இருந்த தீபா திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி தீபாவும் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு கணவன் மனைவி உயிரிந்த சம்பவம் திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளன.