கல்யாணம் ஆகாத டீச்சர்.. கையில் குழந்தை.. கண்ணில் கண்ணீர்.. ஏமாற்றியவன் எஸ்கேப்.. போலீஸில் புகார்
இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஏமாற்றிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
ஆரணி: டீச்சருக்கு கல்யாணமே ஆகவில்லை.. ஆனால் குழந்தை பிறந்துவிட்டது.. இதையடுத்து, தன்னை ஏமாற்றியவர் மீது போலீசில் புகார் தரவும், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கம் போல ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய கதைதான் இதுவும். ஆனால் இதில் ஏமாந்தவர் ஒரு படித்த ஆசிரியை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.
ஆரணி அருகே வசித்து வருபவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு டீச்சர். தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பிரபாகரன் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மூண்டது. இருவரும் விழுந்து விழுந்து காதலித்தனர். கிட்டத்தட்ட 3 வருடமாக இந்த காதல் வேள்வியை நடத்தி வந்துள்ளனர்.
என்னதிது.. நடு ரோட்டுல வெள்ளையா.. பேயா இருக்குமோ.. நானே வருவேன்.. கேரள காட்டிலிருந்து ஒரு அலறல்!
ஆசை பேச்சு.. அடிக்கடி சந்திப்பு.. கடைசியில் கரு உருவாகி விட்டது டீச்சரின் வயிற்றில். இதையடுத்து கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை நெருக்க.. தள்ளிப் போட்டு வந்தார் பிரபாகரன். ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இந்த நிலையில் வாயும் வயிறுமாக இருந்த டீச்சருக்கு பிரசவ வலி வந்து அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
காதலும் பறி போய் கையில் குழந்தையும் ஆன நிலையில் இதற்கு மேலும் பிரபாகரனிடம் சமாதானம் பேசிக் கொண்டிருக்க முடியாது என்று முடிவெடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் சாந்தி. போலீஸார் இப்போது பிரபாகரனை தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.
விசாரணை நடக்கிறது. மறுபக்கம் இருவரும் சேர்ந்து வாழும் வழி குறித்த ஆலோசனைகளும் நடந்து வருகின்றனவாம். அப்பா செய்த சேட்டை எதுவும் புரியாத நிலையில் அந்த பச்சைக் குழந்தை தாயின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.