ஆரணி அருகே சிறுமியை கடத்திய இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்
ஆரணி: ஆரணி அருகே மைனர் பெண்ணை கடத்திய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி குமார் என்பவரின் மைனர் மகள் அதே கிராமத்தில் 10ம் வகுப்பு வரையில் படித்து விட்டு வீட்டில் உள்ளார்.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரநாதன் மகன் கூலி தொழிலாளி பிரகாஷ் (31) என்பவர் குமாரின் மைனர் மகளை ஒரு தலைகாதலாக காதலித்து வந்துள்ளார். பலமுறை அந்த பெண்ணை காதலிக்க கட்டாயபடுத்தியதாக தெரிகின்றன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண்ணை பிரகாஷ் என்பவர் கடத்தி சென்றுள்ளார். இது சம்மந்தமாக கட்டிட தொழிலாளி களம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தொட்டிலில் இருந்த புடவை இழுத்து விளையாடிய போது விபரீதம்.. சென்னை ராமாபுரத்தில் சிறுவன் பலி
புகாரின் பேரில் கடத்தி சென்ற பிரகாஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் களம்பூர் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தின் ஏரிகரை இருப்பதாக தகவலின் பேரில் களம்பூர் போலீசார் பிரகாஷ் என்பவரை பிடித்தனர். மைனர் பெண்ணை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.