திமுகவினர் செய்த தவறுகளுக்கு ஆதாரம் இருக்கு… தேர்தல் முடியட்டும்.. முதல்வர் பழனிசாமி ஆவேசம்
திருவாரூர்: திமுகவினர் செய்த தவறுகள் அனைத்தும் ஆதாரத்துடன் உள்ளது தேர்தல் முடிந்தவுடன் வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.
நான் சாதாரணமானவன் என்பதால் நான் செல்லும் இடங்களில் கூட்டம் இல்லாமல் ஒருநபர் இருந்தால் கூட அவரிடம் நான் பேசுவேன் என்று விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
மேலும், 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் என்றும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனி பிரிவு அமைக்கப்படும் எனவும் கூறினார்.
மோடி வீட்டில் கறுப்புப்பணம் இருக்கு.. புகாரளித்தால் ரெய்டு நடத்துவார்களா?... மு.க. ஸ்டாலின் கேள்வி
அதே போல், திருவாரூர் மடப்புரம் பாலம், சீனிவாசபுரம் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.
முன்னதாக, மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றும் திறமையான பிரதமர் இருந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.