திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கை காட்டியும் நிறுத்தாத பைக்.. தப்பி ஓடிய கொள்ளையர்கள்.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ

கொள்ளையன் மணிகண்டன் பைக்கில் தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ

    திருவாரூர்: போலீசார் கை காட்டியும்.. பைக்கை நிறுத்தாமல் கொள்ளையர்கள் தப்பி செல்வதும், அவர்களின் பின்னாடியே போலீசார் பைக்கில் துரத்தி விரட்டி பிடிப்பதும் சிசிடிவி காட்சிகளாக தற்போது வெளியாகி பரபரப்பை தந்துள்ளது.

    நேற்று முன்தினம் மாலை கொள்ளையன் மணிகண்டனை போலீசார் திருவாரூரில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை வெளியான உடனேயே, தங்களுடைய வாகன சோதனையின்போது ஹெல்மட் அணியாமல் வந்த மணிகண்டனை மடக்கி பிடித்ததாக வாகன போலீசார் கூறியதாக ஒரு தகவல் வந்தது.

    ஆனால், உண்மையிலேயே மணிகண்டனை விரட்டி பிடித்தது தனிப்படை போலீசார் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக, மணிகண்டனை விரட்டி பிடிக்கும் சிசிடிவி காட்சிகளையும் தற்போது திருவாரூர் மாவட்ட போலீசாரே வெளியிட்டுள்ளனர்.

    ஃபேன்சி ஸ்டோரில் வாங்கிய மாஸ்க்.. காலில் கயிறு கட்டி சிக்னல்.. மணிகண்டனின் பகீர் வாக்குமூலம்ஃபேன்சி ஸ்டோரில் வாங்கிய மாஸ்க்.. காலில் கயிறு கட்டி சிக்னல்.. மணிகண்டனின் பகீர் வாக்குமூலம்

    சப்-இன்ஸ்பெக்டர்

    சப்-இன்ஸ்பெக்டர்

    கொள்ளையர்கள் அந்த வழியாக தப்புவார்கள் என்று இவர்களுக்கு முன்னமேயே தெரிந்திருந்தது. அதனால்தான், ஒரு மணி நேரமாக அந்த வழியாக சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். அந்த சிசிடிவியில் இது நன்றாக தெரிகிறது.

    துரத்தல்

    துரத்தல்

    விளம்பல் என்ற இடத்தில் நடந்த சம்பவம் இது. எதிர்பார்த்தபடியே கொள்ளையர்கள் பைக்கில் வருகிறார்கள். பைக்கை ஓட்டிவரும் மணிகண்டன் ஹெல்மட் போட்டிருக்கிறான். போலீஸை தூரத்தில் பார்த்ததும், சென்று கொண்டிருக்கும் ஒரு ஆம்னி வேன் பின்னாடியே மறைந்து ஓட்டி வருகிறான். ஆனாலும், இதை கவனித்துவிட்ட எஸ்ஐ, இவர்களை தடுத்து நிறுத்துகிறார். வண்டி நிறுத்தவில்லை... போலீஸை பார்த்ததும் வேகம் எடுக்கிறது.

    பாரதநேரு

    பாரதநேரு

    உடனே பாரதநேரு, பக்கத்தில் இருந்த இன்னொரு போலீஸுடன் பைக்கில் பின்னாடியே விரட்டி செல்கிறார். இப்படியே ஒன்றரை கிலோ மீட்டருக்கு துரத்துகிறார். மடப்புரம் கமலாம்பாள் நகரில் இருவரையும் மடக்கி பிடித்தார்.

    மக்கள் கூட்டம்

    மக்கள் கூட்டம்

    அப்போதுதான் பின்னாடி உட்கார்ந்து வந்த சுரேஷ் தப்பியோடியதும், மணிகண்டன் பெட்டியுடன் சிக்கியதும் நடந்தது. மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள சாலையில், நடந்த இந்த சேஸிங் சிசிடிவி காட்சிதான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    CCTV Footage scenes have released by Trichy District Police about about tracing the Lalitha jewellery thieves Manikandan and Suresh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X