திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகாம்களாக செயல்படும் பள்ளிகள்.. திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை அந்த மாவட்டங்களுக்குக்குட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த போது திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், புயலால் வீடுகளை இழந்தோர் என பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

District administration announces holiday for School in Pudukottai and Tiruvarur

நிவாரண முகாம்களாக பள்ளிகள் செயல்படுவதாலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் நாளை திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் புதுக்கோட்டையில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை பெய்தது. செட்டிநாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, காந்திகிராமம், புலியூர், கிருஷ்ணாபுர்ம ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

English summary
District Administration announces Holiday for Schools only in Pudukottai and Tiruvarur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X