எங்க ஊருக்கு தண்ணி வந்துடுச்சு.. யாருப்பா அது.. காலாட்டிட்டே கால்வாய் மேல உக்காந்திருக்கிறது..!
மன்னார்குடியில் தண்ணி வந்துடுச்சு என்று டிஆர்பி ராஜா ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
மன்னார்குடி: "எங்க ஊருக்கு தண்ணி வந்துடுச்சு" என்று ட்வீட் பதிவிட்டதுடன்.. தன் ஒத்த காலை ஆட்டிக் கொண்டே, இன்னொரு கையில் செல்போன் பேசியபடி பாலத்தில் உட்கார்ந்திருக்கும் எம்எல்ஏ டிஆர்பி ராஜாவின் போட்டோ வைரலாகி வருகிறது.
தண்ணியை திறந்து விடுங்க என்று அடிக்கடி கேட்டு ஆர்ப்பாட்டத்தை கையில் எடுப்பவர்கள் மன்னார்குடிவாசிகள்தான்.
விவசாயம் பொய்த்து போகிறது, குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.. பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், வடிகாலை தூர் வார வேண்டும்.. என்பன உட்பட எத்தனையோ கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மன்னார்குடி விவசாயிகள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
இதில் திமுக சார்பாக விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆவார். இந்நிலையில், மன்னார்குடியில் தண்ணீர் வந்துவிட்டதாம். இதை டிஆர்பி ராஜாவே தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதுவும் தண்ணீர் ஓடும் பாலத்துக்கு மேல உட்கார்ந்து கொண்டு இதை தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், சிறிய பாலம் போல இருக்கிறது. அதற்கு அடியில் தண்ணீர் சலசலவென ஓடுகிறது. பாலம் மேல் உள்ள திட்டில் உட்கார்ந்து கொண்டுள்ளார் டிஆர்பி ராஜா. ஒரு காலை ஆட்டிக் கொண்டே, கையில் செல்போனுடன் கேஷூவலாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த போட்டோவை போட்டு, "எங்க ஊருக்கு #தண்ணி வந்துடுச்சு" என்றும் பதிவிட்டுள்ளார்.
எங்க ஊருக்கு #தண்ணி வந்துடுச்சு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥺 #Thalikottai #Mannargudi #மன்னார்குடி #காவிரி #டெல்டா #Delta #Cauvery pic.twitter.com/lJPWxYajGg
— T R B Rajaa (@TRBRajaa) September 24, 2019
ஒரு எம்எல்ஏ என்றால் இந்த இந்த வேலைகளைதான் செய்யணும், இப்படித்தான் பொதுவெளியில் நடந்து கொள்ள வேண்டும், இப்படித்தான் ட்வீட் போட வேண்டும், என்ற வழக்கமான பாணியெல்லாம் இவரிடம் எப்போதுமே இருப்பது இல்லை. தன் வழி தனி வழியென்றே ஒவ்வொரு காரியத்திலும் இவர் இறங்கி செய்வதால்தான் தொகுதி மக்களிடம் தினந்தோறும் ஏதாவது ஒரு ரூபத்தில் பேசப்பட்டு வருகிறார இந்த ராஜா!