பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானதை மட்டும் அனுப்புங்க ப்ளீஸ்.. திமுக எம்எல்ஏ வேண்டுகோள்
Recommended Video
மன்னார்குடி: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு என்ன தேவைப்படுகிறதோ அந்தப் பொருட்களை மட்டுமே அனுப்புமாறு மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகள் இன்னும் மீளவில்லை. இன்னும் பல வாரங்களாகும், பல மாதங்களாகும் ஓரளவு இயல்பு நிலை திரும்பவே. புயல் பாதித்த பகுதிகளுக்கு தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
மன்னார்குடியும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. இன்னும் கூட மன்னார்குடியில் முழு இயல்பு நிலை திரும்பவில்லை. இடை இடையே மழையும் தொடர்ந்து வருவதால் மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் டிஆர்பி ராஜா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ, அதை மட்டும் அனுப்பவும். அனைத்துப் பொருட்களையும் அனுப்புவதைத் தவிர்க்கவும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ:
தயவு செய்து தேவையான பொருட்களை மட்டுமே கொடுங்கள் 🙏🏼
— T R B Rajaa (@TRBRajaa) November 23, 2018
Please understand what the affected REALLY need & then send material for #Gajarelief 🙏🏼🙏🏼🙏🏼 1/3 #GajaCycloneRelief #கஜா #கஜாபுயல் #மன்னார்குடி #GajaCycloneUpdates #GajaRelief #Mannargudi pic.twitter.com/47dgF0wMgx