திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமஸ்கிருதம் படிச்சா.. எந்த கோவில்ல மணியாட்ட விடுவ.. மூத்தமொழி தமிழ்.. அதை முதல்ல படி.. சீமான் சுளீர்

திருவாரூர் பிரச்சாரத்தில் திமுக, அதிமுகவை சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Seeman Speech: முதலில் நீ மூத்த மொழி தமிழை படி: சீமான் காட்டம்- வீடியோ

    திருவாரூர்: சமஸ்கிருதம் படின்னு சொல்றே.. அப்படி படிச்சா எந்த கோயில்ல எங்களை மணியாட்ட விடுவே? சோம்பப்படி விக்கிறவன், தட்டு கழுவறவன், வாட்ச்மேனா நிக்கறவன், குல்பி ஐஸ் விக்கிறவன் இவங்க எல்லாம் யாரு... எல்லாம் இந்தி படிச்சவங்கதான்" என்று சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    திருவாரூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியை தாய்மொழியாக கொண்டவன் ஒரு கோடி பேர் 5 ஆண்டுகளில் ஏன் வந்திருக்கான் தமிழ்நாட்டுக்கு? எதுக்கு வந்திருக்கான்? அதான் இந்தி படிச்சா வேலை கிடைக்கணும்னு சொன்னீங்களே? அப்பறம் ஏன் இங்க வர்றீங்க? உங்களுக்கு இங்க என்ன வேலை?

    கருத்துக் கணிப்பு முக்கியமில்லை... இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை... தம்பிதுரை கருத்துக் கணிப்பு முக்கியமில்லை... இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை... தம்பிதுரை

    நீ தமிழை படி

    நீ தமிழை படி

    சோம்பப்படி விக்கிறவன், தட்டு கழுவறவன், வாட்ச்மேனா நிக்கறவன், குல்பி ஐஸ் விக்கிறவன் இவங்க எல்லாம் யாரு... எல்லாம் இந்தி படிச்சவங்கதான். இப்படிதான் சமஸ்கிருதம் படின்னு சொல்றது. சமஸ்கிருதம் படிச்சா, எந்த கோயில்ல எங்களை மணியாட்ட விடுவே? அதுக்கு உன்கிட்ட பதில் இருக்கா? மூத்த மொழி தமிழ். அதனால முதல்ல நீ தமிழை படி.

    அறிவிப்பு எங்கே?

    அறிவிப்பு எங்கே?

    வாக்குச்சாவடிகளில் கட்டணம் இல்லைன்னு ஒரு அறிவிப்பு வந்திருக்கா இதுவரைக்கும்? தூய குடிநீர் இலவசம் நாடு முழுமைக்கும் என்று சட்டம் வந்திருக்கா இதுவரைக்கும்? தரமான சிகிச்சை இலவசம்னு அறிவிப்பு வந்திருக்கா? அப்பறம் ஏன் எங்களுக்கு வரி? இந்த 5 வருஷத்துல இதுதான் எங்க சாதனைன்னு சொல்லி வாக்கு கேட்க உங்களுக்கு வக்கு இல்லை.

    திமுக

    திமுக

    பாஜகவை முதன்முதலில் தமிழ்நாட்டுக்கு கூட்டி வந்தவர்கள் யார்? திமுகதான்.. ஒன்றுமே இல்லாமல் இருந்தவர்களை ஒன்றாக்கியது யார்? இவர்கள்தான். எப்படி பாகிஸ்தான் இல்லைன்னா பாஜகவுக்கு பாலிடிக்ஸ் இல்லையோ, அதுபோல இந்த தேர்தலில் பாஜக இல்லைன்னா திமுகவுக்கு பாலிடிக்ஸ் இல்லை.

    ஓட்டு போடாதீங்க

    ஓட்டு போடாதீங்க

    பிஜேபி இந்த முறை வரக்கூடாது, எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு திமுக கேட்குது. இது எப்படி இருக்கு தெரியுமா? "புலி வருது, ஓடியாங்க, நான் படுத்துக்கறேன், எல்லாரும் வந்து என்மேல ஏறி படுத்துக்குங்க என்பதுபோல இருக்கு. வீடு வீடா போய் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லிட்டு வர்றாங்க.

    ரெண்டு பேரும் செய்யல

    ரெண்டு பேரும் செய்யல

    நாங்கள் வந்தால் டாஸ்மாக்கை ஒழிப்போம்னு சொன்னாங்க. ரெண்டு பேரும் வாய் திறக்கல. நாங்கள் வந்தால் ஊழலை ஒழிப்போம்னு சொன்னாங்க. முடியல. அதனால இப்போ நாங்க ஒரு முடிவு பண்ணிட்டோம். நாங்கள் வந்தால், இவங்க ரெண்டு பேரையும் முதல்ல ஒழிப்போம். அப்பதான் ஊழலை ஒழிக்க முடியும்னு.

    பூமியின் சொத்து

    ஆற்று மணலை எல்லாரும் தின்றுவிட்டார்கள். இதை மோடியோ, ராகுலோ, ஸ்டாலினோ, எடப்பாடியோ பேசுவார்களா? ஒன்னும் வேணாம்.. மணலின் பயன் பற்றி பேசட்டும்.. அப்படி அவங்க மணலின் பயன் பற்றி பேசிட்டால், நான் இந்த கூட்டத்தை இப்படியே முடிச்சிக்கிறேன். இந்த பூமியை வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். அனைத்தையும் விற்று வங்கியில் பணம் சேர்த்துவிட்டால் போதுமா?" என்று சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    English summary
    In Thiruvar Campaign, Seeman has criticized BJP, Congress, ADMK & DMK Parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X