கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியிலிருந்து குமுறல்!
Recommended Video
திருத்துறைப்பூண்டி: கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் டெல்டா மக்களின் கைகள். ஆனால் இன்று மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்கள் குமுறி வருகின்றனர்.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது காவிரி டெல்டா மாவட்டங்கள். மக்கள் அத்தனை பேரும் கொந்தளித்துப் போயுள்ளனர். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் இன்னும் முழுமையான உதவிகள் அவர்களுக்கு வந்து சேரவில்லை.
மக்களே ஒருவருக்கொருவர் கை கொடுத்து தூக்கி விடும் நிலை. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து நமக்கு சரவணன் ஒரு கோரிக்கை விடுத்து வீடியோ அனுப்பியுள்ளார். அதில் அவர் டெல்டா மாவட்ட மக்களுக்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும். யாருடைய உதவியும் தேவையில்லை என்று வெளியில் கூறினாலும் கூட உதவிகளை நம்பித்தான் அனைவரும் காத்துள்ளனர். சென்னையிலிருந்து போதிய அளவு உதவிகள் வரவில்லை. இது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் சரவணன்.
முழு வீடியோவை இங்கு பாருங்கள்:
கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியிலிருந்து குமுறல்! #CycloneGaja #CycloneDamages #thiruthuraipoondi pic.twitter.com/nk5rNVzQXg
— Oneindia Tamil (@thatsTamil) November 19, 2018