திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்!

Google Oneindia Tamil News

திருவாரூர்: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற போது போலீஸார் போட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு டிராக்டரை விவசாயிகள் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி குடியரசு தினவிழாவின் போது டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர்.

Tiruvarur farmers tractor rally

நேற்றைய தினம் நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளை கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். அப்போது டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத படி வைக்கப்பட்ட தடுப்புகளை விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.

பல இடங்களில் தடுப்புகளை அழுத்தி பிடித்து கொண்டு டிராக்டரை உள்ளே வர விடாமல் தடுத்த போது போலீஸார் மீது வாகனத்தை ஏற்றுவது போல் டிராக்டரை ஓட்டி போலீஸாரை சிதற விட்டனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

English summary
Farmers conducted tractor rally by hitting barricades in Tiruvarur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X