ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு நாளில் கொட்டி தீர்க்கும் கனமழை... பந்தல் சேதம்
Recommended Video
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்க உள்ள நிலையில், விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சேதமடைந்தது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
இந்நிலையில் விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் நண்பகல் 12:23 மணிக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிராமணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
தலைநகரில் தமிழனுக்கு தலைகுனிவு.. கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்.. தமிழிசை ஹேப்பி!
இன்று பதவியேற்பு
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவின் 2-வது முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார். இந்த விழாவில் ஜெகன் மோகன் மட்டுமே பதவியேற்க உள்ளதாகவும், அவரது அமைச்சரவை சகாக்கள் வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்பைத் தொடர்ந்து, டெல்லி செல்லும் ஜெகன் மோகன் ரெட்டி, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.
முக்கிய வாக்குகுறுதிகள்
பதவியேற்புக்கு பிறகு ஆந்திர மாநிலத்துக்கான தொலைத் நோக்கு திட்டம் குறித்து உரையாற்றும் ஜெகன் மோகன், தேர்தலில் அளித்த 9 முக்கிய வாக்குகுறுதிகளை தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்தல் சேதம்
இந்தநிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்காக, விஜயவாடாவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் விதமாக, பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கு நேற்றிரவு பெய்த கனமழையால், பதவியேற்பு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் சேதமடைந்தது.
தொண்டர்கள் நம்பிக்கை
அதனை சரிசெய்யும் பணியும், மழையால் ஏற்பட்ட தண்ணீரை வெளியேற்றும் பணியும் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. ஆந்திராவில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கும் நாளில் கொட்டித் தீர்க்கும் மழையால், விடிவு காலம் பிறக்கும என்ற நம்பிக்கை வந்துள்ளதாக அக்கட்சியின தொண்டர்கள் பேசிவருவதை கேட்கமுடிகிறது.
மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று அவரது பதவியேற்பு விழாவில், பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயவாடா சென்றுள்ளார்.
முதல்வர் பயணம்
இதே போல், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.