ப்பா.. என்னா ஒரு ஆர்வமப்பா இந்த வேட்பாளருக்கு.. வாக்காளர்களே தூரமாவே நில்லுங்க.. குத்திட போறாரு!
திருப்பதி: ஆந்திர நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின் தன்னுடைய மனநிலையை வித்யாசமாக வேட்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசாபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.ஏ.பால் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின் தன்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்திய காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
கிறிஸ்தவ மத போதகரான கே.ஏ. பால், பிரஜா சாந்தி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.
40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்... மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
வேட்புமனு
நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் ஆந்திராவிலுள்ள நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரஜாசாந்தி கட்சியி வேட்பாளராகப் போட்டியிடும் அவர் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஹெலிகாப்டர்
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தபின் அவர் தன்னுடைய மனநிலையை வித்தியாசமாக வெளிப்படுத்திய காட்சியை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இவர் ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வைரல்
அந்த காட்சியில் தன்னுடைய காரின் முன் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் கே. ஏ. பால் சிறுகுழந்தை போல் தனக்குத்தானே பாக்ஸிங் செய்து கொள்கிறார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இத்தனை மகிழ்ச்சியா
ஏதோ குத்துச்சண்டை வீரர் போல் நடனமாடும் இவர் வேட்புமனு தாக்கலுக்கே இத்தனை மகிழ்ச்சியை வெளியிடுகிறார். இதே தேர்தலில் இவருக்கு கணிசமான வாக்குகள் பெற்றால் என்ன செய்வாரோ!