83 நாட்களுக்குப் பின் திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் தொடங்கியது- அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருப்பதி: கொரோனா லாக்டவுனால் 83 நாட்களுக்குப் பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய தொடங்கினர்.
Recommended Video
கொரோனா லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
திருப்பதியிலும் 3 நாட்களுக்கு முன்னர் ஏழுமலையான் கோவில் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் பொதுதரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டோக்கன் பெற கூட்டம் நேற்று திருப்பதியில் அலைமோதியது.
ராஜஸ்தானில் காங். ஆட்சியை கவிழ்க்கிறது பாஜக- ரூ25 கோடி பேரம்- எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டில் அடைப்பு
இதனையடுத்து இன்று காலை 7.30 மணி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுதரிசனம் தொடங்கியது. மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.