திருப்பதி மலையின்.. "2,830"வது படிக்கட்டில்.. இருட்டில் நடந்த அந்த சம்பவம்.. அலறிய பக்தர்கள்
திருப்பதி மலையில் திருடர்கள் பக்தர்களிடம் திருட முயன்றுள்ளனர்
திருப்பதி: திருப்பதி மலை உச்சியில்.. 2,830வது படிக்கட்டில்.. இருட்டுநேரத்தில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துவிட்டது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக புகழ் பெற்றது திருப்பதி பெருமாள் கோயில்.. அதனால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.. அப்படி வரும்போது, திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை வழியாக செல்வது மட்டுமின்றி வேண்டுதல் காரணமாக அலிபிரி நடைபாதை வழியாகவும் பக்தர்கள் மலையேறுவார்கள்.
இவர்களுக்காகவே பாதைகள் போடப்பட்டுள்ளன.. கேன்டீன்கள், கடைகளும் இந்த பக்தர்களுக்காகவே இருக்கின்றன.. ஆனால், அந்த பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது.. அந்த காட்டில் உள்ள விலங்குகள் அடிக்கடி உணவு தேடி கோயில் பகுதிக்கு வந்துவிடுவது உண்டு.. அதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் இந்த சம்பவம்நடந்துவிட்டது.. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் திருப்பதிக்கு சென்றிருக்கிறார்கள்.. கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் 4 பேரும் சென்றுள்ளனர்.. அலிபிரி நடைபாதை வழியாக நடந்தே போயுள்ளனர்.. 2,830வது படிக்கட்டு வந்துவிட்டனர்.. அப்போதுதான் அந்த கும்பல் இவர்களை சுற்றி கொண்டது.. அவர்கள் அத்தனை பேரும் திருடர்கள்.
தம்பதியிடம் நகை, பணத்தை உடனே வெளியே எடுக்குமாறு சொல்லி மிரட்டி உள்ளனர்.. இருட்டு நேரம்.. அவர்கள் முகம்கூட இவர்களால் சரியாக பார்க்கவில்லை. இவர்களது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளது.. பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடியும் விட்டது.. இதையடுத்து பதறி போன தம்பதியினர் போலீசுக்கு தகவல் சொல்லவும், அதற்கு பிறகுதான் அவர்கள் விரைந்து வந்து விசாரித்துள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.. லைட் வசதி அங்கு இல்லையாம்.. அதற்கும் ஏற்பாடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.திருப்பதி: திருப்பதி மலை உச்சியில்.. 2,830வது படிக்கட்டில்.. இருட்டுநேரத்தில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துவிட்டது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெங்களூர் விரைந்த டிடிவி தினகரன் .. சித்தியிடம் நலம் விசாரிப்பு.. சசிகலா நல்லா இருக்கிறாராம்!
உலக புகழ் பெற்றது திருப்பதி பெருமாள் கோயில்.. அதனால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.. அப்படி வரும்போது, திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை வழியாக செல்வது மட்டுமின்றி வேண்டுதல் காரணமாக அலிபிரி நடைபாதை வழியாகவும் பக்தர்கள் மலையேறுவார்கள்.
இவர்களுக்காகவே பாதைகள் போடப்பட்டுள்ளன.. கேன்டீன்கள், கடைகளும் இந்த பக்தர்களுக்காகவே இருக்கின்றன.. ஆனால், அந்த பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது.. அந்த காட்டில் உள்ள விலங்குகள் அடிக்கடி உணவு தேடி கோயில் பகுதிக்கு வந்துவிடுவது உண்டு.. அதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் இந்த சம்பவம்நடந்துவிட்டது.. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் திருப்பதிக்கு சென்றிருக்கிறார்கள்.. கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் 4 பேரும் சென்றுள்ளனர்.. அலிபிரி நடைபாதை வழியாக நடந்தே போயுள்ளனர்.. 2,830வது படிக்கட்டு வந்துவிட்டனர்.. அப்போதுதான் அந்த கும்பல் இவர்களை சுற்றி கொண்டது.. அவர்கள் அத்தனை பேரும் திருடர்கள்.
தம்பதியிடம் நகை, பணத்தை உடனே வெளியே எடுக்குமாறு சொல்லி மிரட்டி உள்ளனர்.. இருட்டு நேரம்.. அவர்கள் முகம்கூட இவர்களால் சரியாக பார்க்கவில்லை. இவர்களது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளது.. பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடியும் விட்டது.. இதையடுத்து பதறி போன தம்பதியினர் போலீசுக்கு தகவல் சொல்லவும், அதற்கு பிறகுதான் அவர்கள் விரைந்து வந்து விசாரித்துள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.. லைட் வசதி அங்கு இல்லையாம்.. அதற்கும் ஏற்பாடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.