அம்மாடியோவ்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் ஒரு மாதத்தில் எவ்வளவு வசூலாயிருக்கு பாருங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
உலக பணக்கார கடவுள்களில் ஒருவர் திருப்பதி ஏழுமலையான். ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும் காசு பணங்களையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
உண்டியல் வசூல்
இதனால் ஆண்டுதோறும் ஏழுமலையான் கோவிலில் காணிக்கை குவிந்து வருகிறது. உண்டியலில் குவியும் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
100 கோடிக்கு மேல் வசூல்
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் வசூலான உண்டியல் காணிக்கை தற்போது எண்ணப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் 100 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
புதிய சாதனை
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 91 கோடியே 81 லட்சம் ரூபாய் வசூலானது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 9 கோடி ரூபாய் அதிகரித்து 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
லட்டு விநியோகம் உயர்வு
இதேபோல் கடந்த ஆண்டு ஜூனில் 95.58 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1.13 கோடிலட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதா தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.