திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 வயது ஷீலா.. ஜாலியாக இருக்க கூப்பிட்ட 14 வயது சிறுவன்.. வராததால்.. கழுத்தை நெரித்து கொலை!

Google Oneindia Tamil News

திருப்பூர்: 30 வயது ஷீலாவுக்கு 14 வயது சிறுவனுடன் உறவு இருந்துள்ளது.. ஜாலியாக இருக்க கூப்பிட்டும் ஷீலா வராததால், கழுத்தை நெரித்தே கொன்றுள்ளான் இந்த 14 வயது சிறுவன்.. திருப்பூரில் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    30 வயது ஷீலா.. ஜாலியாக இருக்க கூப்பிட்ட 14 வயது சிறுவன்.. வராததால்.. கழுத்தை நெரித்து கொலை!

    பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா... இவரது மனைவி ஷீலா.. 30 வயதாகிறது.. இவர்களுக்கு கோமன்குமார் 6, சத்தியம் குமார் 4, என்ற மகன்களும் துளசி குமாரி என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    இவர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வந்தவர்கள்.. குடும்பத்துடன் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.. அங்கேயே ஒரு பனியன் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்தனர்.

    தகராறு

    தகராறு

    இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.. அதனால் மிதுன் தாதியா கோபித்து கொண்டு, குழந்தைகள் 3 பேரையும் கூப்பிட்டுக் கொண்டு பீகாருக்கு சென்றுவிட்டார்.. அதற்கு பிறகு அவர் திரும்பி திருப்பூருக்கு வரவே இல்லை. ஆனால் ஷீலா தேவி மட்டும் திருப்பூர் வீட்டிலேயே தனியாக குடியிருந்து வந்தார்.

    கழுத்தில் காயம்

    கழுத்தில் காயம்

    இந்த நிலையில் நேற்று இவரது வீட்டு கதவு திறக்காமலேயே இருந்தது.. அதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர்.. அப்போதுதான் வீட்டுக்குள் ஷீலா தேவி பிணமாக விழுந்து கிடந்தார். இதை பார்த்து அலறிய அவர்கள், உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. விரைந்து வந்த அவர்கள் ஷீலா தேவியின் உடலை கைப்பற்றினர்.. ஷீலா கழுத்தில் காயம் இருந்தது. அதனால் கழுத்தை நெரித்துதான் இவரை கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்...பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் விசாரணையில் போலீசாரே ஆடிப்போய்விட்டனர்.

    14 வயது சிறுவன்

    14 வயது சிறுவன்

    30 வயது ஷீலா தேவிக்கும், 14 வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்துள்ளது.. அந்த சிறுவனும் பீகாரை சேர்ந்தவனாம்.. கொங்குநகரில் தங்கி இருந்து பனியன் கம்பெனியிலேயே வேலை செய்யும்போதுதான் இந்த கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. முன்பு கணவனுடன் இருந்தபோது, அவர் வேலைக்கு சென்றுவிட்டால், இந்த சிறுவனை வீட்டுக்கு வரவழைத்து விடுவாராம் ஷீலா தேவி.. இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.

    கள்ள உறவு

    கள்ள உறவு

    இதில்தான் ஷீலாவுடன் சண்டை போட்டுக் கொண்டு, குழந்தைகளையும் அவர் அழைத்து கொண்டு பீகாருக்கே சென்றுவிட்டது தெரியவந்தது. கணவன் ஊருக்கு போயிவிடவும் ஷீலாவுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது... ரொம்பவும் ஈஸியாக சிறுவன் ஷீலா வீட்டுக்கு வந்து போயுள்ளான்.. இப்போது ஷீலா தேவி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கவும் அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    விசாரணையில் ஷீலா தேவியை கொன்றது சிறுவன்தானாம்.. நேற்று முன்தினம் உல்லாசமாக இருக்க ஷீலாதேவியை சிறுவன் அழைத்துள்ளான்.. ஆனால் ஷீலாதேவி மறுப்பு சொல்லவும், சிறுவனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. அதனால்தான் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளான். இப்போது சிறுவனை கைது செய்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    14 year old boy murdered 30 year old woman due to illegal relationship and arrested near tiruppur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X