திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 2 பேர் பலியானதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக உயிரிழந்த ஒரு நோயாளின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது பெயர் பிரகாஷ், என் பெரியம்மா யசோதா (67 வயது) சனிக்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் எடுக்கவில்லை.
இதனால் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, தனிமைப்படுத்துதல் வார்டில் வைத்திருந்தார்கள்.
இரண்டு நாளாக நன்றாகத்தான் இருந்தார். இன்று காலை கூட டீ, பிஸ்கட் எல்லாம் சாப்பிட்டார். திடீரென சுமார் 10மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து பம்பிங் போதவில்லை என்றார்கள். மின்சாரம் வந்தால் தான் சரியாகும் என்றார்கள்.
இன்னும் ஒரு அடி தான்.. கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை.. விவசாயிகள் ஹேப்பி
இதுவரை மூன்று பேர் இறந்துவிட்டார்கள். 2 பேரை ஆபத்தான நிலையில் வேறு வார்டுக்கு மாற்றி உள்ளார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள். என் பெரியம்மா இறந்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார். இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்து தெளிவான விவரத்தை அவர் கூறவில்லை.
இந்த விவாகரம் குறித்து இதுவரை திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கங்கள் வெளியாகவில்லை. வெளியான பின்னரே முழு உண்மை நிலவரம் தெரியவரும்.