உடுமலை அருகே பைக்குகள் பயங்கர மோதல்.. பெட்ரோல் டேங்க் வெடித்து இருவரும் கருகி சாவு
Recommended Video
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்கில் தீ பற்றியதால், விபத்தில் தலையில் அடிபட்டு எழுந்திட முடியாத நிலையில் இருந்த இரு வேறு வாகனங்களை ஓட்டிவந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ரெட்டிபட்டி பகுதியை சார்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தளி சாலையில் அதிகாலையில் தனது (யுனிகான்)இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
கடலூரில் திடீரென இடிந்து விழுந்த வீடு.. ஒரு வயது பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் சாவு
யமஹா வண்டி
அதே போல் வல்லகுண்டாபுரம் பகுதியை சார்ந்த ஹரிகரன் என்பவரும் தனது (யமஹா)
இருசக்கர வாகனத்தில் அதே சாலையில் எதிரே வந்து கொண்டிருந்தார்
இருவரும் காயம்
அப்போது ஜிலேபி நாயக்கன் பாளையம் என்ற இடத்தில் இரு இருசக்கர வாகனம் எதிர் எதிரே பயங்கரமாக மோதிகொண்டது. இதில் கீழே விழுந்த இருவரும் தலையில் பலத்த காயத்துடன் மயங்கினர்.
இருவரும் சாவு
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் மயக்க நிலையில் இருந்த இருவர் உடலிலும் தீ பற்றி எரிந்தது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.
உடுமலையில் அதிர்ச்சி
தகவல் அறிந்து வந்த தளி காவல்துறையினர் இருவர் உடலையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
. இருசக்கர வாகனம் மோதி தீபிடித்து இருவர் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.