வாவ்.. திருப்பூரில் சாலையில் தோகையை விரித்தாடிய மயில்.. கண்களுக்கு விருந்தான காட்சி- வைரல் வீடியோ!
திருப்பூர்: திருப்பூர் சாலையோரத்தில் தோகை விரித்து ஆடிய மயிலை சாலையில் சென்ற மக்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் வாழ்ந்து வருகின்றனர் இவை கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு நகர் பகுதிக்கு வழிதவறி வந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் திருப்பூர் மங்கலம் சாலை பழக்குடோன் பகுதி அருகே சாலையோரத்தில் ஏராளமான மயில்கள் இறை தேடி அமர்ந்திருந்தன அப்போது ஒரு ஆண் மயில் தனது தோகையை விரித்து நடனம் ஆட துவங்கியது.
இதனைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு தோகை விரித்து ஆடிய மயில் நடனத்தை ரசிக்க துவங்கினர்.
ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு.. மாதாந்திர ஊதியத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்
உணவுப்பொருட்கள் கிடைக்காத காரணத்தினாலேயே மயில்கள் வனப்பகுதியை விட்டு நகர் பகுதிகளுக்கு வருவதாகவும் வனத்துறையினர் இதனை கருத்தில் கொண்டு போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வனவிலங்குகள் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.