தவறான திட்டங்கள் முன்னிறுத்தப்படுகிறது... காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்க்கிறது... தமிழிசை ஆவேசம்
திருப்பூர்: ஓட்டு வாங்க தவறான திட்டங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்ப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் வறுமை இருப்பதற்கு ராகுல் காந்தியின் கட்சி தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, பிரதமர் மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி என்றும், கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவீர்களா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. கூட்டணி இல்லாமலேயே நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தமிழிசை சௌந்தர ராஜன் கூறினார்.
Comments
English summary
Congress is trying to mislead the people by pushing false scheme to buy vote. bjp state president Tamilisai has criticized
Story first published: Wednesday, January 30, 2019, 14:45 [IST]