அதிமுகவினரால் ‘சர்கார்' நிறுத்தம்... தாராபுரத்தில் ரசிகர்கள் டிக்கெட் காசை கேட்டு.. வெய்ட்டிங்!!
Recommended Video
தாராபுரம் : தாராபுரத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குள் புகுந்த அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் படத்தை முழுவதும் பார்க்க முடியாத விஜய் ரசிகர்கள் பணத்தை திரும்பத் தருமாறு தியேட்டர் வாசலில் காத்திருக்கின்றனர்.
தாராபுரத்தில் சர்கார் படம் திரையிடபட்டுள்ள தியேட்டர்கள் முன்பாக அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் படம் திரையிடப்பட்டுள்ள எஸ்.வி.ராம்.தியேட்டர், சத்தியா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யபட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. அப்போது தியேட்டர் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் சத்தியா தியேட்டர் வளாகத்திற்குள் புகுந்து அங்கு வைக்கபட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சர்கார் படக்காட்சி ரத்து செய்யபட்டதாக அறிவித்த எஸ்.வி.ஆர்.திரையரங்கில் சர்கார் படம் திரையிடப்பட்டதாக தகவல் கிடைத்ததால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் எஸ்.வி.ஆர்.திரையரங்குக்குள் புகுந்து சத்தம் போட்டதால் படம் பார்க்கவந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு வெளியேறினர். அப்போது படம் போடவில்லை எனகூறி படத்தை போட்ட தியேட்டர் ஊழியரை அ.தி.மு.க.வினர் தாக்க தொடங்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
[சர்கார் படத்திலேருந்து சென்சார் செஞ்சிட்டீங்க... டிக்டாக்ல எப்படி கட்டுப்படுத்துவீங்க!]
சர்கார் படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிமுகவினர் செய்த ரகளையால் பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியேறினர். படத்தை முழுவதும் பார்க்க முடியாததால் ரசிகர்கள் பலர் டிக்கெட் கட்டணத்தை திருப்பி தரவேண்டும் என்று வலியுறுத்தி தியேட்டர் முன்பாக காத்திருக்கின்றனர்.