தொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்!
தொடர் மழை காரணமாக திருப்பூரில் உள்ள அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் அது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
Recommended Video
திருப்பூர்: தொடர் மழை காரணமாக திருப்பூரில் உள்ள அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் அது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மும்பை, கேரளா, புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை வருகிறது. அதேபோல் நேற்று திருப்பூரில் கனமழை பெய்து வருகிறது.
இரவோடு இரவாக பாகிஸ்தான் செய்த காரியம்.. இந்தியாவிற்கு எதிராக முக்கிய அஸ்திரத்தை எடுத்தது!
திருப்பூரில் பெய்து வரும் கனமழையால் உடுமலை அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மழையில் இருந்து வேகமாக தண்ணீர் அமராவதி அணைக்கு வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 2,272 கனஅடி நீர் அணைக்கு வந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அமராவதியில் வினாடிக்கு நீர்வரத்து 10350 கன அடியாக உள்ளது. ஒரே இரவில் இவ்வளவு அதிக அளவில் அங்கு நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.
இதனால் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 16 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று 48 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 16 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணை தற்போது 64 அடி நீர் நிறைந்து உள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்டது அமராவதி அணை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் அது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.