திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்னத்தம்பியை சீக்கிரம் பிடியுங்கள்.. விவசாயிகள் திடீர் போராட்டம்..ஏன், என்னாச்சு?

Google Oneindia Tamil News

Recommended Video

    இடமின்றி தவிக்கும் சின்னத்தம்பி.. மக்கள் போராட்டம்- வீடியோ

    திருப்பூர்: சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

    கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில்தான் இந்த சின்னத்தம்பி தனது குடும்பத்துடன் இருந்தது. ஆனால் இந்த சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது.

    கடந்த ஜனவரி 25ம் தேதி வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அங்கிருந்து அது தப்பித்து வெளியே வந்தது.

    பெரிய பயணம்

    பெரிய பயணம்

    தற்போது தனது குடும்பத்தை தேடி இது தடாகம் காட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். சின்னத்தம்பி யானையை இன்னும் காட்டுக்குள் அனுப்ப முடியாமல் வனத்துறை கஷ்டப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி மிகவும் மெதுவாக செல்வதால், அதனால் தனது காட்டிற்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    முதலில் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற வனத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த முடிவை அரசு கைவிட்டது. மேலும், அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விட அரசு முடிவெடுத்து இருக்கிறது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலையில் இருந்து இடம்பெயர்ந்த சின்னத்தம்பி யானை தற்போது உடுமலை பேட்டை அருகே இருக்கிறது. அங்குள்ள விளைநிலங்களில் இது தஞ்சம் புகுந்து இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் விளைநிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    போராட்டம் செய்கிறார்கள்

    போராட்டம் செய்கிறார்கள்

    இதனால் தற்போது சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள். சின்னதம்பி யானையை உடனே பிடிக்கக் கோரி உடுமலைபேட்டையில் சாலைமறியல் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சின்னத்தம்பி வயல் வழியே செல்வதால் நிலம் பெரிய அளவில் சேதம் அடைவதாக அவர்கள் புகார் வைக்கிறார்கள்.

    English summary
    Even after huge support, These farmers protesting against Elephant Chinnathambi - Here is the real reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X