மனைவியின் கள்ளத்தொடர்பு.. வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கணவன் தற்கொலை
திருப்பூர்: மனைவியின் கள்ளத்தொடர்பால் கணவன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
திருப்பூர் சாமுண்டிபுரம். நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன் (27) சித்ரா (21) தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இவர் புஷ்பா ஸ்டாப்பில் லோடு மேனாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ராவிற்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் (22) என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்து கண்டித்து வந்துள்ளார்.
"என் அந்தரங்க உறுப்பில்.. எஃகு டம்பளரை திணித்து".. 3 பேரால் சீரழிக்கப்பட்ட 50 வயது பெண் பகீர்
எனினும் சித்ரா அருணுடன் வாழ விருப்பம் தெரிவித்ததால் மனமுடைந்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்.