எந்த துறையிலும் தமிழகம் வெற்றி நடை போடவில்லை.. கனிமொழி கடும் விமர்சனம்
திருப்பூர்: தமிழகம் வெற்றி நடை போடவில்லை என திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி சிறப்பானதாக அமைய இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திமுகவின் மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவர் தியாகி திருப்பூர் குமரன் நினைவிடம் சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் தமிழகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார நிலையங்கள் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் அவசரகதியில் மினி கிளினிக் தொடங்கப்பட்டது ஏன் என திமுக சார்பில் கேள்வி எழுப்பபட்டது.
தன்னை தக்கவைத்துக் கொள்ள பாஜகவிடம் தமிழ்நாட்டை , தன் கட்சியை , தன் மொழியை , சுயமரியாதையை , தமிழர்களின் அடையாளத்தை அடகுவைத்து விட்டது அதிமுக. அரசு பணத்தில் செய்த சாதனைகள் என ஆயிரம் கோடியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் முதல்வர் மட்டுமே வெற்றி நடை போட்டு வருகிறார்.
தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை எனவும் பேசினார். ரேஷன் கடைகள் , நியாய விலைக் கடைகளாக நடக்க வேண்டும். ஆனால் , நியாயம் இருப்பதாக தெரியவில்லை. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சியாக அமைய இருக்கிறது என பேசினார்.