திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மோடி அடிக்கல்.. மெட்ரோ நீட்டிப்பு சேவையும் தொடக்கி வைத்தார்
Recommended Video
திருப்பூர்:கருப்பு கொடி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பிரதமர் மோடி விமானத்தில் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர் அவரை வரவேற்றனர்.
அதன் பின்னர், ஹெலிகாப்டர் வழியாக கோவையில் இருந்து விழா நடைபெறும் திருப்பூர் வந்தார். பிரதமர் மோடியுடன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் வேலுமணி, தம்பிதுரை ஆகியோர் இருந்தனர்.
பின்னர், பிரதமர் மோடி 100 படுக்கை வசதிகளை கொண்ட இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டினர். மருத்துவமனை மூலம் 1.22 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.
விழாவில், திருச்சி விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட உள்ள கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.மேலும், எண்ணூர் பிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை ஏஜிடிஎம்எஸ் வண்ணாரப்பேட்டை வரையாய மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார்.