ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால்.. நித்யா செய்த காரியம்.. அதிர்ந்து போன திருப்பூர்!
ஒரு வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்
திருப்பூர்: ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தால்.. நித்யா செய்த காரியத்தை நினைத்து அக்கம்பக்கத்தினர் அலறியே விட்டனர்.. திருப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் காங்கயம் ரோடு ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன்... பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி நித்யா. தர்ஷன் என்ற ஒரு வயது ஆண்குழந்தை இவர்களுக்கு உள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல் மகுடேஸ்வரன் வேலைக்கு சென்றுவிட்டார். மேல் மாடியில்தான் இவர்கள் குடியிருந்தனர்.. அதனால் கீழ்வீட்டில் இருந்தோரும், அக்கம்பக்கத்தினரும் ரொம்ப நேரமாக நித்யாவை காணோம், குழந்தை சத்தத்தையும் காணோமே என்று சந்தேகப்பட்டு மேலே வந்தனர்.
அப்போது ஜன்னல் வழியாக பார்த்தபோது, நித்யா தூக்கில் தொங்கியபடி இருந்தார்.. அவருக்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் ஒரு வயது குழந்தையும் சடலமாக கிடந்தான்.. இதை பார்த்து பதறிய மக்கள், உடனடியாக ரூரல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கொரோனா: சென்னையை தொடர்ந்து பெரும் பாதிப்பில் மதுரை! எந்த மாதிரி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்?
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்... நித்யா, குழந்தையின் சடலங்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... குழந்தையை கொன்று விட்டு, நித்யா தற்கொலை செய்தாரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், ஒரு வயது குழந்தையும் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.