கணவனுடன் சண்டை.. ஒரு வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தாய்..!
ஒரு வயது குழந்தையை தூக்கிலிட்டு கொன்ற தாய் தற்கொலை செய்து கொண்டார்
திருப்பூர்: ஒரு வயதே ஆன பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்றுள்ளார் பெற்ற தாய்.. மேலும் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் இந்த விபரீதம் திருப்பூரில் நடந்துள்ளது!
மதுரை மாவட்டம் வாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர்.. 28 வயதாகிறது... இவரது மனைவி துர்காதேவி.. அவருக்கு வயது 24.. கல்யாணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றன.
இவர்களது ஒரு வயது மகன்தான் ரித்திக்.. பல்லடம் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் தான் பிரபாகரன் வேலை பார்க்கிறர்.. 3 மாதங்களுக்கு முன்பு அவிநாசியை அடுத்துள்ள பெரியாயிபாளையம் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று காலை கணவன் - மனைவிக்கும் வீட்டில் சண்டை வந்துள்ளது.. பிறகு வழக்கம்போல் பிரபாகரன் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார்.. ஆனால் சாயங்காலம் வரை வீட்டைவிட்டு துர்காதேவி வெளியே வரவே இல்லை.. மாலை 7 மணி ஆகியும் கதவு சாத்தியபடியே இருந்ததால், அக்கம் பக்கத்து வீட்டார் சந்தேகம் அடைந்தனர்.
கதவை தட்டி திறந்து பார்த்தபோது துர்காதேவி, குழந்தை ரித்திக் இருவருமே தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.. இதை பார்த்து அதிர்ந்த அவர்கள் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போதுதான் கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த துர்காதேவி தற்கொலை செய் முடிவு செய்தது தெரியவந்தது.. முன்னதாக, தன் பச்சிளம் குழந்தையை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, அதன்பிறகு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி நிறைந்த சோகத்தை திருப்பூர் பகுதியில் ஏற்படுத்தி வருகிறது.