உலகளவில் டிரென்டான நேசமணி.. இப்போது டீசர்டிலும்.. திருப்பூரில் தயாரிப்புகள் ஜரூர் #PrayforNeasamani
Recommended Video
திருப்பூர்: உலகளவில் டுவிட்டரில் டிரென்டான நேசமணி இப்போது திருப்பூரில் டிசர்ட்டிலும் டிரென்ட் ஆகி வருகிறார்.
கடந்த 30-ஆம் தேதி சிவில் என்ஜினியரிங் லேர்னர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை போட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் சொல்வார்கள் என ஒருவர் துபாயில் உள்ள விக்னேஷ் பிரபாகரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவரோ இதன் பெயர் சுத்தியல். இதுதான் பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து டங் டங் என சத்தம் கேட்டு அவரது மண்டை உடைந்தது என வடிவேல் காமெடியை கூறியுள்ளார்.
'ஏழை பங்காளன்' 'ஒடிஷா; மோடியின் நிஜ முகம் இதுதானா... பகீர் தகவல்கள்
ஹேஷ்டேக்
இதையடுத்து அந்த நண்பரும் நேசமணி இப்போது எப்படி உள்ளார் என கேள்வி கேட்க அதற்கு விக்னேஷ் Pray for Neasamani என கூறியதன் மூலம் உருவான ஹேஷ்டேக் பிரபலமானது.
பாஜக புகார்
இது டுவிட்டரில் உலக அளவில் டிரென்டாகியது. இது போல் ஒரு ஹேஷ்டேக்கை டிரென்ட்டாகியதன் மூலம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவே மறக்கடிக்கப்பட்டது என சொல்லலாம். இதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஜரூர்
இந்த நிலையில் டிரென்ட்டாகும் அனைத்து ஆன்லைனில் சக்கை போடு போடும் என்பதால் திருப்பூரில் நேசமணி டீசர்ட் உருவாக்கும் பணிகள் ஜரூராக உள்ளன.
சூடுபிடிக்கும்
அதில் நேசமணியின் அவுட்லைன் படத்தை போட்டு தலையில் சுத்தி விழுவது போல் இருக்கிறது. கீழே Pray for Neasamani என எழுதப்பட்டுள்ளது. இந்த டீசர்ட்டுகள் நிச்சயம் விற்பனையிலும் சூடுபிடிக்கும் என்றே தெரிகிறது.