BREAKING NEWS- திருப்பூரில் பிரதமர் மோடி.. இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். திருப்பூரில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.
ஆந்திராவில் இருந்து திருப்பூர் வரும் பிரதமர் அதன்படி இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார். அதனபின் சென்னையில் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷநின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார் .
திருப்பூர் பெருமாநல்லூரில் பெரிய பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மற்ற வருகை போலவே இதுவும் பெரிய புயலை தமிழகத்தில் கிளப்பி இருக்கிறது. முக்கியமாக மீண்டும் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக தொடங்கி உள்ளது.
சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரே கட்சி பாஜகதான் - மோடி
எஸ்சி, எஸ்டி மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள்தான் சட்டம் கொண்டு வந்தோம் - மோடி
நாடு முன்னேறட்டும், மக்கள் முன்னேறட்டும் - மோடி
''வணக்கம்'' என்று தமிழில் கூறி பேச்சை முடித்தார் பிரதமர் மோடி
திருவள்ளுவரின் குறளை கூறி பேச்சை முடித்தார் பிரதமர் மோடி
''வெள்ளத்தனைய மலர்நீட்டம்'' குறளை ஆங்கிலத்தில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி
மோடியை வசைபாடுவதே அவர்களின் அரசியல்- மோடி
காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் - மோடி
நீங்கள் டெல்லியில் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளீர்கள் - மோடி
எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை - மோடி
இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார்
முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது - மோடி
தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது - மோடி
இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள் - மோடி
அதனால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது - மோடி
பல நாள் கோரிக்கையான வருமான வரிவிலக்கு கோரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது - மோடி
மக்களின் எதிர்காலத்தை நாங்கள் உறுதிப்படுத்துவோம் - மோடி
இரண்டு மடங்கு வேகத்தில் நாங்கள் சாலைகளை அமைத்து வருகிறோம் - மோடி
சாகர் மாலா திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் - மோடி
இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக மாறி இருக்கிறது - மோடி
ஆயுஷ்மான் திட்டம் மூலம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்றுள்ளனர் - மோடி
பல்வேறு முன்னேற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம் - மோடி
குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது - மோடி
பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது
ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த விதமான பலனும் ஏற்படவில்லை - மோடி
காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலை கொண்டது இல்லை
கடல் தொடங்கி ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர் - மோடி
புரோக்கர் ஆட்சியை காங்கிரஸ் நடத்திக் கொண்டு இருந்தது
ஊழல் செய்து புரோக்கர்கள் எல்லோரும் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள் - மோடி
Wonderful to be in Tiruppur, Tamil Nadu. Watch my speech at the massive rally. https://t.co/XO4Bf0fQG4
— Narendra Modi (@narendramodi) February 10, 2019
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் செல்கிறார்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்,
டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் தம்பிதுரை, வேலுமணி ஆகியோர் மோடியை வரவேற்றனர்
Tamil Nadu: Prime Minister Narendra Modi arrives in Tiruppur. He will launch several development projects here and address a public rally shortly. pic.twitter.com/0yq4DbMkCb
— ANI (@ANI) February 10, 2019
மோடிக்கு எதிரான மதிமுகவின் போராட்டத்தை கைவிட போலீசார் கோரிக்கை
மோடிக்கு எதிரான போராட்டத்தை கைவிட வைகோ மறுப்பு
போலீசார் - வைகோ வாக்குவாதம் காரணமாக சலசலப்பு
மோடிக்கு எதிராக பேசாதீங்க.. தடுத்த போலீஸ்.. மறுத்த வைகோ.. திருப்பூரில் பதட்டம்! #Vaiko pic.twitter.com/QES1e03Ywo
— Oneindia Tamil (@thatsTamil) February 10, 2019