அடடடடே.. ரூ.2 லட்சம் பக்கத்துலயே இருந்தும்.. இவர் எதை திருடியிருக்கார் பாருங்களேன்.. செம வீடியோ
டாஸ்மாக்கில் நூதன கொள்ளை அடித்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
திருப்பூர்: டாஸ்மாக் கடையில் திருட்டு என்றதும் போலீசாரும் எவ்வளவு கொள்ளை போனதோ என்று பதறி கொண்டுதான் வந்தனர்.. ஆனால், விசாரணையில்தான் தெரிந்தது அந்த கொள்ளையனின் அதிசயம் பற்றி!!
Recommended Video
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒருடாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.. இந்த கடையில் கொள்ளை நடந்துவிட்டதாக அந்த பகுதி முழுக்க செய்தி பரவி பரபரப்பாகிவிட்டது.
நடுராத்திரி டாஸ்மாக் கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து யாரோ புகுந்து கொள்ளை அடித்துவிட்டதாக போலீசுக்கும் தகவல் சென்றது.. போலீசாரும் விரைந்து வந்தனர்.. கடையில் சோதனை நடத்தியபோதுதான் தெரிந்தது கொள்ளை போனது சரக்கு பாட்டில்கள் என்று!!
அந்த சரக்கு பாட்டில்கள் பக்கத்தில்தான் டேபிளில் அன்றைய கலெக்ஷன் பணம் இருந்துள்ளது.. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தும், அந்த குடிமகன், இதை தொடாமல், வெறும் சரக்கை மட்டும் எடுத்து சென்றுள்ளார்.
புது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி
இதற்காகவேதான் ஜன்னல் கம்பிகளை உடைத்து கொண்டு உள்ளே வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பிறகு அங்கிருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆராய்ந்ததில், அந்த நபரின் முகம் பதிவாகி உள்ளது.. இதனை அடிப்படையாக வைத்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.