திருப்பூரை உலுக்கிய சத்தம்.. அதிர்வலைகளுடன் வெடி வெடித்தது போல் சத்தம் கேட்டதால் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வெடி வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
Recommended Video
அண்மையில் பெங்களூரு நகரில் வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதற்கு தேஜஸ் போன்ற சூப்பர் சோனிக் விமானம் பறந்ததால் வானில் பெரும் சப்தம் உருவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரவியது பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10.30 மணி அளவில் அதிர்வலைகளுடன் பலத்த வெடி சத்தம் வானில் கேட்டது. இதேபோன்ற வெடி சத்தம் தாராபுரம், குண்டடம் , கொடுவாய், பல்லடம் உள்பட திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கேட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சத்தத்திற்கு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் ரக விமானம் காரணம் என்கிறார்கள். இந்த விமானம் புதன்கிழமை விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டது. இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். சுமார் 7 டன் எடை கொண்ட இந்த போர் விமானம், ஒலியின் வேகத்திற்கு இணையாக அதிவேகத்தில் செல்லக்கூடியதாகும்.
சென்னை உட்பட 13 நகரங்களின் கொரோனா நிலவரம் - மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆய்வு
எனவே இந்த விமானத்தின் சோதனை ஓட்டத்தின் போது சோனிக் பூம் சப்தமும் அதிர்வலைகளும் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.