பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்
Recommended Video
சென்னை: திருப்பூரில் இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதிமுக- பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என அப்பகுதி மக்கள் போஸ்டர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகரின் மகனுக்கு தொடர்பு என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதுபோல் பாஜக ஆட்சியில் வடமாநிலங்களில் எத்தனையோ சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
அவங்க திட்டுனா பதிலுக்கு திட்டமாட்டோம்.. கம்யூனிஸ்ட் பற்றி நாராயணசாமி கப்சிப்!
இதில் சில சம்பவங்கள் பாஜக பிரமுகர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே மத்தியிலும் மாநிலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயம் பரவலாக பேசப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, பட்டுகோட்டையார் நகர் என பல்வேறு பகுதிகளில் "இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதிமுக- பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்" என மிகப் பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.