திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ!

கட்டிங் வாங்கி தருமாறு போதை ஆசாமி அட்டகாசம் செய்த வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்டிங் வேணும்.. திருப்பூர் அருகே போதை ஆசாமி அட்டகாசம்-வீடியோ

    திருப்பூர்: "கட்டிங் வேணும்.. எனக்கு பொண்டாட்டி, புள்ளை யாரும் இல்லை. நான் பைத்தியம் கிடையாது.. எனக்கு அரை குவார்ட்டர் வாங்கி தாங்க" என்று ஃபுல் போதையில் இளைஞர் ஒருவர் தன்னை தானே ரத்தம் சொட்ட சொட்ட காயப்படுத்தி கொண்டு மிரட்டும் வீடியோ வைரலாகிறது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் ஒருவர் தண்ணி அடிக்க வந்துள்ளார்.

    போதை தலைக்கேறியதும், திடீரென பாட்டிலை உடைத்து தன்னை தானே உடம்பில் குத்திகிழித்து கொண்டார். இதில் அவரது தோள், நெஞ்சு பகுதி, கைகளில் ரத்தம் கொட்டியது.

    குவார்ட்டர்

    குவார்ட்டர்

    பிறகு, தள்ளாடி கொண்டே வெளியே வந்த அந்த இளைஞர், மதுக்கடைக்கு போவோர், வருவோரிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக சொன்னார். "எனக்கு ஒரு குவார்ட்டர் வாங்கி தாங்க.. எனக்கு அம்மா, அப்பா இல்லை.. பொண்டாட்டி, புள்ளைங்க இல்லை.. எனக்கு வாழவே பிடிக்கல" என்று தள்ளாடி நடந்தவாறே சொன்னார். இதை கண்டு பொதுமக்கள் நடுங்கினர்.

    மென்டல் ஆஸ்பத்திரி

    மென்டல் ஆஸ்பத்திரி

    மற்றொரு புறம் அங்கிருந்த போலீசாரும் இளைஞரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் இளைஞர் பிடிகொடுக்கவில்லை. "நான் பைத்தியம் இல்லை சார்.. நான் மென்டல் ஆஸ்பத்திரி போக மாட்டேன். எனக்கு வாழ பிடிக்கல.. எனக்கு யார் அரை குவார்ட்டர் வாங்கி தர்றது.. குவார்ட்டர் வாங்கி தந்தால் ஆம்புலன்சில் ஏறுவேன்" என்றார். இதனால் போலீசார் லாவகமாக அவரிடம் பேசி ஆம்புலன்ஸில் ஏற்றி, பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    காயம்

    காயம்

    அங்கு நடத்திய விசாரணையில், இவர் பெயர் மூர்த்தி என்பதும், கையிலிருந்த பணத்திற்கு குடித்து முடித்த பின் மேற்கொண்டு குடிக்கும் ஆவலில், மதுபாட்டில்களை உடைத்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு அனைவரிடமும் மது வாங்கித் தரச்சொல்லி மிரட்டியதும் தெரியவந்தது.

    தலைமறைவு

    தலைமறைவு

    இதையடுத்து, ஆஸ்பத்திரியில் மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மூர்த்திக்கு போதை கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தது. இதனால் எங்கே போலீசார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து, ஆஸ்பத்திரியில் இருந்து தலைமறைவாகிவிட்டார். டாஸ்மாக் கடையில் ரத்தம் சொட்டச் சொட்ட குவார்ட்டர் வாங்கித்தர சொல்லி இளைஞர் மிரட்டல் விடுத்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

    English summary
    Palladam Police have admitted a drunk man who threatened to hurt himself for alcohol and this video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X