லுக் விட்டபடியே "தள்ளி" கொண்டு போன இளைஞன்.. அதிர்ச்சி அடைந்த மணிமாறன்.. அதிர்ச்சி காட்சி!
பைக் திருடி செல்லும் இளைஞனின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
Recommended Video
திருப்பூர்: டூவீலரில் இருந்து சாவியை எடுக்க மணிமாறன் மறந்துவிட்டார்.. செல்போன் பேசிக் கொண்டே வந்த இளைஞன், சுற்றிலும் ஒரு லுக் விட்டு விட்டு, டூவிலரை அசால்ட்டாக கிளப்பி கொண்டு பறக்கிறார்.
திருப்பூர் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். வழக்கம்போல கடையை திறக்க டூவீலரில் வந்தார் மணிமாறன்.
கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, கடை திறக்க போய்விட்டார், இந்த அவசரத்தில் பைக்கில் இருந்த சாவியை எடுக்க மறந்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்துதான், வண்டி சாவியை காணோமே என்று நினைத்து வண்டியில் இருக்குமோ என்ற சந்தேகப்பட்டு பார்த்தார்.
தினகரனின் அடுத்தடுத்த ஸ்டெப்ஸ்.. டென்ஷன் தலைக்கேறும் சசிகலா... என்னெல்லாம் ஆகுமோ!
ஆனால் நிறுத்தி வைத்த டூவீலரையே அங்கு காணோம், இதனால் கடை முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை மணிமாறனே போட்டு பார்த்தார். அப்போது அந்த பதிவில், ஒரு இளைஞன் செல்போன் பேசி கொண்டே வருகிறார். வண்டியை பார்த்ததும், அதில் இருந்த சாவி கண்ணில் படுகிறது.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வண்டியை திருடி கொண்டு நகர்கிறார். இதை கண்ட மணிமாறன் அதிர்ச்சி அடைந்து, திருப்பூர் வடக்கு ஸ்டேஷனில் புகார் செய்கிறார். இந்த ஸ்டேஷன் மணிமாறன் கடைக்கு பக்கத்திலேயேதான் உள்ளது. இதையடுத்து வண்டியை லவட்டி கொண்டு போகும் இளைஞர் யார்என்று போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள்.