அரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை!
டிராபிக் போலீஸ்காரரின் பேக்கை திருடும் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
திருப்பூர்: ஒன்னு போலீஸ்காரர் பேக்கை திருடுகிறார்.. இல்லேன்னா போலீஸ்காரர் பேக்கை இன்னொருத்தர் ஆட்டைய போடுகிறார்.. ஆகமொத்தம் இந்த ஹேண்ட் பேக்கில்தான் எல்லோருக்கும் கண்ணாக இருக்கிறது.
4 நாளைக்கு முன்னாடி சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் போலீஸ்காரர் ஒருவர் ஹேண்ட் பேக்கை திருடும் காட்சி இணையத்தில் வைரலானது. அது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருப்பூரில் டிராபிக் போலீஸ்காரர் ஒருத்தர் பேக்கை இளைஞர் ஒருவர் ஆட்டைய போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
என் சங்கீதாவா இப்படி.. நம்பவே முடியலயே.. மரிய புஷ்பம் எடுத்த சோக முடிவு!
சிக்னல் ரோடு
மாநகர வடக்கு போக்குவரத்து டிராபிக் போலீஸ்காரருக்கு, குமரன் ரோட்டில் உள்ள பார்க்ரோடு சிக்னலில்தான் டியூட்டி. மதியானம் 2 மணிக்கு வழக்கமாக வேலைக்கு வந்தார். எப்போ வந்தாலும், கையில் கொண்டு வரும் பேக்கை, எதிரில் இருக்கும் ஒரு டீக்கடையில் வைத்துவிட்டுதான் வேலை பார்ப்பார்.
சிசிடிவி கேமரா
அப்படித்தான் நேற்று முந்தா நாளும் வேலையை ஆரம்பித்தார். சாயங்காலம் 6 மணிக்கு டியூட்டி முடிஞ்சு வந்து பார்த்தால் பேக்கை காணோம். டீ கடையில் வேலை பார்க்கிற எல்லாரையும் கேட்டாச்சு.. யாருமே பார்க்கவில்லை, எடுக்கவில்லைன்னு சொல்லி விட்டனர். இதனால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
நோட்டம்
அந்தவீடியோவில், ஒரு மொட்டை தலை இளைஞர் வருகிறார். போலீஸ்காரர் பேக் வைத்திருந்த பெஞ்சில் உட்கார்ந்து சூடா ஒரு டீ சாப்பிடறார். பக்கத்தில் இருந்த பேக்கை பார்த்துவிட்டார். கண்ணை உறுத்துகிறது.. கிட்டத்தட்ட அரைமணி நேரம் சுற்றிலும் நோட்டம் போடறார்.
விசாரணை
பிறகு நைசாக அந்த பேக்கை தோளில் எடுத்து மாட்டிக் கொண்டு நழுவி செல்கிறார். பட்டபகலில், இவ்ளோ ஜனநடமாட்டம் இருக்கும்போது, ஒரு போலீஸ்காரர் பேக்கையே லவட்டிக்கிட்டு போனது யாரா இருக்கும் என்று போலீசார் மண்டை காய்ந்து போயுள்ளனர். இது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது.