திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு

இளம்பெண் திருப்பூர் அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி-வீடியோ

    திருப்பூர்: நடுக்காட்டில் பிணமாக விழுந்து கிடந்த இளம்பெண் யார் என்றே இதுவரை போலீசாருக்கு தெரியவில்லை. அதனால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதி உள்ளது. இங்கு ஒரு பெண் சடலமாக கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

    Young Woman murder near Tirupur

    அந்த பெண்ணின் தலையில் யாரோ கல்லை போட்டு கொன்றுள்ளதாகவும் தெரிகிறது. அதனால் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது சம்பந்தமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இச்சம்பவம் நடை பெற்றதா என்று விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் இறந்த இப்பெண்ணின் அடையாளத்தை வைத்து, இதற்கு முன்பு காணாமல் போனவர் பற்றின புகாரில் தேடப்பட்டவராக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் இல்லை, அந்த காட்டு பகுதிக்குள் ஒரு ஸ்கூட்டி நின்று கொண்டிருக்கிறது. அந்த வண்டி நம்பரை வைத்தும் விசாரணை துவங்கி உள்ளது.

    நடுக்காட்டுக்குள் ஒரு இளம்பெண்ணின் பிணம் கிடப்பதை அறிந்து, அந்த பகுதி மக்கள் திரண்டு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Young woman murdered near Thirupur and Police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X