இந்த வயசில.. மாமியார் செய்த காரியம்.. மிரண்டு போன மருமகன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மாமியாரின் கள்ள உறவை கண்டித்த மருமகன் கொலை செய்யப்பட்டார்
திருப்பூர்: நம்ம மாமியார் இப்படிப்பட்டவங்களா என்று அதிர்ந்து போனார் மருமகன்.. கடைசியில் அப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துவிட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராணி... கணவர் இறந்துவிட்டார்.. பூங்கொடி என்ற மகள் உள்ளார்...
கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில், ராணிக்கு தண்டபாணி என்பவருடன் உறவு ஏற்பட்டது. இது 10 வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட உறவு.. பூங்கொடி அப்போது சிறுமியாக இருந்தார்.
வாக்குவாதம்
இப்போது பூங்கொடிக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் துரை.. மகளுக்கு கல்யாணம் ஆகியும் ராணி தன் கள்ள உறவை கைவிடவில்லை.. இந்த விஷயம் மருமகன் துரைக்கும் தெரிந்துவிட்டது. அதனால், அதிர்ந்து போன துரை, மாமியாரிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. இதுவே வாக்குவாதமாகவும், தகராறாகவும் அடிக்கடி உருவெடுத்தது.
பிரச்சனை
இந்நிலையில், சம்பவத்தன்றும் தண்டபாணியும் ராணியும் நெருக்கமாக இருந்ததை, மகளும் மருமகனும் நேரிலேயே பார்த்துவிட்டார்கள்... இதனால் மறுபடியும் பிரச்சனை வெடித்தது.. துரையும், பூங்கொயும் கள்ளக்காதலர்கள் இருவரையும் கண்டித்தனர்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தண்டபாணி, இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்...
சிகிச்சை
இதில் இருவருமே சுருண்டு விழுந்து அலறினர்.. அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்... ஆனால், செல்லும் வழியிலேயே துரை இறந்துவிட்டார்.. பூங்கொடிக்கு கோவை ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. ஆனால் இப்போது சீரியஸாக இருக்கிறார்..
கைது
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. தண்டபாணியை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.. ராணியிடம் விசாரணை நடக்கிறது. மாமியாரின் தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.