வாய், கை காலை கட்டி.. பெண்ணை நாசம் செய்து.. கல்லை போட்டு.. கொடூர கொலை.. திருச்சி அருகே அட்டகாசம்
பள்ளி மாணவியை இளைஞர் கொலை செய்துள்ளார்
திருச்சி: காட்டு பகுதியில் இளம்பெண்ணின் செருப்பைதான் முதலில் கண்டனர்... இதன்பிறகுதான் சடலத்தை கண்டெடுத்தனர்.. அவரது கை, கால், வாயில் துணி கட்டப்பட்டு.. நாசம் செய்து.. அதன்பிறகு தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்றுள்ளார் காதலன்
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் அவர்.. போன 31-ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை.
அதனால் பதறி போன பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் மகளை காணோம் என்று புகார் தந்தனர். போலீசாரும் அதன்பேரில் விசாரணை நடத்தினர்.
ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. வெட்டி கொண்ட கள்ள காதலர்கள்.. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
காட்டுப்பகுதி
அப்போதுதான், நாக மங்கலத்தில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதியில் காணமல் போன இளம்பெண் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசாரும் விரைந்து சென்று பார்த்ததில், அந்த பெண்ணை யாரோ கொலை செய்துள்ளனர்.. சிறுமியின் கை, கால், வாயில் துணியால் கட்டப்பட்டு இருந்தது!!
பகீர் தகவல்
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், மதிகுமார் என்பவரின் பெயர் அடிபட்டது.. 21 வயதான மதிகுமார் ஒரு கட்டிட தொழிலாளி.. அவரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாயின.
மதிகுமார்
சிறுமியுடன் இவர் நட்பாக பழகி வந்துள்ளார்... அதே சமயம் சிறுமி இன்னொரு இளைஞருட னும் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் ஆத்திரம் அடைந்த மதிகுமார், சிறுமியை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
கைது
அதனால் சம்பவத்தன்று சிறுமியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்கு வைத்து சிறுமியை நாசம் செய்துள்ளார்.. அதன்பிறகு அவரது கை, கால், வாயை துணியால் கட்டி..கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு கொன்றுள்ளார்.. இந்த வாக்குமூலத்தை அடுத்து மதிகுமார் போக்சோவில் கைதாகி உள்ளார்.