திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

68 வயது மூதாட்டியை கொலை.. சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த 16 வயது கஞ்சா சிறுவன்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியை அடுத்த துவரக்குறிச்சியில் 68 வயதான மூதாட்டியை கொன்று அந்த சடலத்துடன் கஞ்சா அடித்த போதையில் இருந்த சிறுவன் உல்லாசம் அனுபவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திருச்சி: மூதாட்டி கொலை.. சிக்கிய 16 வயது சிறுவன்.. விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்..!

    தமிழகத்தில் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கத்தால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட செயல்களுக்கு போதை பழக்கமே முக்கிய காரணம் என்கிறது உளவியல் துறை.

    இந்த நிலையில் திருச்சி அருகே துவரக்குறிச்சியில் 68 வயது மூதாட்டியை சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட அந்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன.

    மூதாட்டி

    மூதாட்டி

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் 68 வயது மூதாட்டி. கணவர் இறந்த நிலையில் அவர் தனிமையில் இருந்து வந்தார். வெளியூர்களுக்கு சென்று சேலை, ரவிக்கை, பாவாடை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து அதன் மூலம் வாழ்ந்து வந்தார்.

    போலீஸுக்கு தகவல்

    போலீஸுக்கு தகவல்

    கடந்த 1-ஆம் தேதி காலை தண்ணீர் பிடிப்பதற்காக அந்த மூதாட்டியின் அக்கம்பக்கத்தினர் அவரை அழைக்க சென்ற போது வீடுமுழுவதும் ரத்தம் சொட்டி மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து துவரங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்ப நாயானது அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்தவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.

    திடுக் தகவல்

    திடுக் தகவல்

    துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சிறுவன் ஒருவர் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிவதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் இறந்த மூதாட்டியின் வீட்டருகேதான் சிறுவனின் வீடு இருக்கிறது என்பதை அறிந்தனர். பின்னர் அந்த சிறுவனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது திடுக் தகவல்களை தெரிவித்தார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த அந்த சிறுவன், மூதாட்டியை கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தார். பின்னர் மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அந்த மூதாட்டி இறந்தவுடன் சடலத்துடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    பள்ளி செல்லாத சிறுவன்

    பள்ளி செல்லாத சிறுவன்

    இந்த 16 வயது சிறுவனுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்தது தெரியவந்தது. சிறுவனின் தந்தையும் குற்ற வழக்கில் சிறையில் இருக்கிறாராம். சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இது போல் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

    English summary
    16 years old boy murdered and raped 68 years old woman in Trichy. Police investigation going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X