40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்!
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
திருச்சி: ஒரு பெண் அதிகாரின்னு கூட பார்க்கலையே.. பஸ்ஸில் சில்மிஷம் செய்த அந்த நபரை தேடி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூரை சேர்ந்தவர் சுலோச்சனா. வயசு 40 ஆகிறது. இவர் துறையூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை மாநில வரி அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கமாக அரசு பஸ்ஸில்தான் வேலைக்கு போய் வருவார். அப்படித்தான் சம்பவத்தன்று பஸ்ஸில் சுலோச்சனா வந்துகொண்டிருந்தார். அப்போது கீழக்குன்னுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் சுலோச்சனாவை பார்த்ததும் பக்கத்தில் போய் நின்று கொண்டார். பிரசாந்துக்கு வயசு 21.
கொஞ்ச நேரத்தில், சில்மிஷ வேலையிலும் ஈடுபட ஆரம்பித்தார். எதையாவது திட்டி சத்தம் போட்டுவிட்டால், இளைஞன் தப்பிவிடக்கூடும் என்பதால் சுலோச்சனா அமைதியாக வந்துள்ளார். இவரது அமைதியை பார்த்ததும் பிரசாந்துக்கு குஷியோ குஷி.. உடனே தன்னுடைய நண்பர்களான பெரியண்ணன், பரத் ஆகியோருக்கு போன் போட்டு, கோட்டாத்தூர் பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்குமாறு சொல்லி உள்ளார்.
அதற்குள் சுலோச்சனா இறங்க வேண்டிய கோட்டாத்தூர் ஸ்டாப்பும் வந்துவிட்டதால், பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிவிட்டார். அவருடன் பிரசாந்தும் இறங்கினார். ஏற்கனவே பிரசாந்த் வரவழைத்திருந்த 2 நண்பர்களும் அங்கு ரெடியாக நின்று கொண்டிருந்தனர். இப்போது 3 பேராக சேர்ந்து சுலோச்சனா பின்னாடியே போனார்கள்.
இதுகுறித்து சுலோச்சனா செல்போனில் துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் சொன்னார். இதையடுத்து, போலீசார் பிரசாந்தை கைது செய்து ஜெயிலில் போட்டதுடன், தலைமறைவாகிவிட்ட பெரியண்ணன், பரத் இருவரை தேடி வருகிறார்கள்.