சுதந்திர தினவிழா.. வெறும் 22 நிமிடங்களில் "இந்தியாவை" உருவாக்கி சாதனை படைத்த திருச்சி கராத்தே வீரர்
திருச்சி: திருச்சியில் சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி 'இந்தியா' என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைக்கப்பட்டது.
74 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கராத்தே வீரர் ஜெட்லி ஏ-3 அளவில் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி 'இந்தியா' என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைத்தார்.
குழப்பத்துக்கு காரணமே அதுதான்.. ஆனால் அஇஅதிமுக அறிக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கலையே!
22 நிமிடங்களில் அவர் உருவாக்கிய இந்த சாதனை நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேச பிதா மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.