திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு

Google Oneindia Tamil News

திருச்சி: கறி விருந்துக்கு சரக்கு வாகனத்தில் சென்ற போது, திடீரென வாகனத்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றுக்குள் சரக்கு வாகனம் விழுந்த விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணித்து கொண்டிருந்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்தச் சரக்கு அப்போது வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது.

8 killed, mini van fallen into well in trichy

இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடிச்சென்று அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் சிக்கியவர்கள் படுகாயம் அடைந்து அபாய குரல் எழுப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதோடு. காவல்துறையினருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம் ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்

அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 8;பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிசிக்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
8 killed and 9 injured on tichy accident, mini van fallen into well in trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X